கொழும்பில் 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது....! பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பு - மருதானை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (9.11.2023) கொழும்பு - மருதானை தொடருந்து நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பேராசிரியர் பிரிவொன்றை வழங்குமாறு கோரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொலிஸாரால் கைது
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் முயற்சித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 21 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி சுவஸ்திகா விவகாரம்: யாழ்.பல்கலையில் ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக திரண்ட மாணவர்கள் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
