பசிலின் வீட்டை ஆக்கிரமித்த பல்கலைக்கழக மாணவர்கள்! மல்வானையில் பெரும் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்தக் காணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
இந்தச் சொத்து முன்னர் "உரிமையாளர் அற்றது" என வர்ணிக்கப்பட்டு, பின்னர் அரசால் பொறுப்பேற்கப்பட்டது என மாணவர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் கடும் இடநெருக்கடி மற்றும் உட்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளை எதிர்கொள்ளும் நிலையில், இவ்வாறான பெறுமதியான அரச காணிகளை அவற்றுக்கு ஒதுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊழல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்டு மக்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதுவரை அர்த்தமுள்ள எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைக்கும் வரை குறித்த சொத்தை ஆக்கிரமிக்கும் "நேரடிப் போராட்டத்தை" ஆரம்பித்துள்ளதாக IUSF தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam