கோர விபத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு
மதுகம - ஹொரண வீதியில் ஹிரிகெட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (1) காலை மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மினிபாய, தவலம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரான அகலவத்த கம்கானம்கே ஹசிரு சந்தீப (23) என்பவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
மதுகமவிலிருந்து ஹொரணை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், ஹிரிகெட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, ஹொரணையிலிருந்து மதுகம நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மதுகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan