இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள கனடா
இந்தியா மற்றும் கனடா இடையே மிகப்பெரிய யுரேனியம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது.
சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், மார்ச் 2026ல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கனடா இந்தியாவுக்கு நீண்ட காலத்திற்கு யுரேனியம் வழங்கும்.
மின்சாரம் உற்பத்தி
யுரேனியம் என்பது அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய முக்கியமான எரிபொருளாகும்.

இந்தியா தனது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யவும், தூய்மையான மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறது.
கனடா உலகின் முக்கிய யுரேனியம் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றல் மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்படும். இந்த ஒப்பந்தம், இந்தியாவின் அணு ஆற்றல் திட்டங்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும்.