கடமைகளை பொறுப்பேற்றார் வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர்
வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றக் கொண்டார்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் பதிவாளர் முன்னிலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அதன்பின் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயம், கந்தசாமி ஆலயம், பிரதான பள்ளிவாசல், நகர விகாரை ஆகியவற்றுக்கு சென்று மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்தையும், பெற்றுக் கொண்டுள்ளார்.
இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி வந்த 'யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்' எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 'இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்' என செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வருகை தந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
