அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் மற்றும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்திய நாடு!
வடகொரியா கடந்த 13 நாட்களில் மற்றும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளில் வடகொரியா தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 5-ம் திகதியன்று வடகொரியா பரிசோதனை செய்தது.
இதனையடுத்து 11-ம் திகதியன்று ஹைப்பர் சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது.
கடந்த 15-ம் திகதியன்று தொடரூந்து ஒன்றில் இருந்து இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது.
இந்தநிலையில், வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
இதன்படி கடந்த 13 நாட்களில் வடகொரியா மேற்கொள்ளும் 4-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.
இதன்பின்னர் ’டேக்டிகள் கைடட்’ ஏவுகணையை தமது நாடு, பரிசோதித்துள்ளதாக வடகொரியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.