இலங்கையின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகாம் மூடப்படுவதாக தகவல்: அகதிகள் அச்சம்
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் பணியகம் மூடப்படும் என்ற தகவல்களையடுத்து, இலங்கையில் அகதிகளாக தங்கியிருப்போர் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பொது சுகாதார அமைப்புக்கான அணுகலைக் கொண்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவுடன் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மாதாந்த வாழ்க்கைக் கொடுப்பனவையும் வழங்குகிறது. உதவித்தொகையின் ஒரு பகுதியாக, அகதிகளின் குழந்தைகள் பள்ளிக் கல்விக்கான நிதியையும் பெறுகிறார்கள்.
அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள்
இந்தநிலையில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அகதிகள் பணியகத்தின் 2023 நிதித்
தேவைகளில் 21வீதம் மட்டுமே இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அண்மைய
தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 நவம்பருக்குள், இலங்கையில் 1,253 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்தனர்.
அத்துடன், 2022 டிசம்பரில், இலங்கை கடற்படை மியான்மரில் உள்ள ரக்கைன்
மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த 105 ரோஹிங்கியா மக்களை ஏற்றிச் சென்ற
இலங்கைப்படையினர் காப்பாற்றிய நிலையில் அவர்களும் தற்போது இலங்கையில்
வசிக்கின்றனர்.
ஆனால் இப்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அலுவலகம் மூடப்படும் என்ற வாய்மொழி, அகதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
