பிரபல பாதாள உலகக் குழு தலைவரின் தாய் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு
பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்கவின் தாய் ஐக்கிய நாடுகள் அமைப்பில் தமது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்க ஹம்டியிடம், பொடி லெசியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் திகதி பொடி லெசி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொடி லெசி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந் நிலையில், எதிர்வரும் 16ம் திகதியுடன் லெசியின் தடுப்புக் காவல் காலம் பூர்த்தியாவதாகவும் அதன் பின்னர் அவரை பெஹலியகொட குற்ற விசாரணைப் பிரிவிற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என லெசியின் தாய் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் தமது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அச்சம் கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதாள உலகக் குழு உறுப்பினர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக இது குறித்து கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதாகவும் கைதிகள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022