ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் இராணுவ அதிகாரி பங்கேற்பு: கனேடிய சட்டத்தரணி கேள்வி!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில், இலங்கையின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்றமை தொடர்பில், கனேடிய சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினருமான வி.ஜே.கிரான் (Marcia V. J. Kran ) கேள்வி எழுப்பியுள்ளார்.
சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட வவுனியா ஜோசப் முகாமில், குலதுங்க அதிகாரியாக 2016-2017 வரை பணியாற்றியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பகமானதாகக் கண்டறிந்துள்ளது.

இந்தநிலையில், அவர் நடந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளில்
ஈடுபடமுடியுமா என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ
உறுப்பினருமான வி.ஜே.கிரான் வினவியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri