உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குத் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஐக்கிய தேசியக் கட்சியால் (UNP) தனது வாக்குத் தளத்தை அதிகரிக்க முடிந்துள்ளது என கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் அவர் நேற்று ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தீர்க்கமான சக்தி
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,சில உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு தீர்க்கமான சக்தியாகவும் ஐக்கிய தேசியக் கட்சி மாறியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எங்களால் ஒரு வாக்குத் தளத்தை அடைய முடிந்துள்ளதுடன், மேலும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சியால் (UNP) தனது வாக்குத் தளத்தை அதிகரிக்க முடிந்துள்ளதுடன் சில உள்ளாட்சி அமைப்புகளிலும் நாங்கள் ஒரு தீர்க்கமான சக்தியாக மாறிவிட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
