இலங்கை வான் பரப்பில் தோன்றிய மர்மப் பொருள் - வெளியான தகவல்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களை (UFOs) காட்டுவதாகக் கூறப்படும் வீடியோக்கள் தொடர்ந்து தனக்கும் இலங்கையில் உள்ள தொடர்புடைய அறிவியல் நிறுவனங்களுக்கும் சமர்ப்பிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இரணவிலவில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒருவரை ஒரு யுஎஃப்ஒ பின்தொடர்வதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.
வானத்தில் ஒளிரும் ஒளியைக் கவனித்ததாக..
அந்தக் காணொளியின்படி, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இரணவிலவில் உள்ள வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) பரிமாற்ற மையத்திற்கு அருகில் ஒரு யுஎஃப்ஒ என்று நம்பப்படும் கண் சிமிட்டும் பொருள் காணப்பட்டுள்ளது.

குறித்த மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இறால் பண்ணையை நடத்தும் நபர் ஒருவர் அதிகாலை 3.00 மணியளவில் இதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
முதலில் வானத்தில் ஒரு ஒளிரும் ஒளியைக் கவனித்ததாகவும், அதை ஒரு டார்ச்சைப் பயன்படுத்தி சமிக்ஞை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
"சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, வெளிச்சம் என் திசையை நோக்கி நகரத் தொடங்கியது. அது ஏதோ ஒரு கப்பல் போல் இருந்தது, ஆனால் அதன் வடிவம் தெளிவாகத் தெரியவில்லை. அது என்னை நோக்கி மிக வேகமாக வந்தபோது, நான் டார்ச்சை அணைத்துவிட்டு ஓட ஆரம்பித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பண்ணையில் இருந்த மற்றொரு நபரை எச்சரித்து, அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
"மேலும் வெளிச்சம் எங்களைப் பின்தொடர்ந்தது. நாங்கள் டார்ச்சை அணைத்தவுடன், அந்தப் பொருள் நகர்வதை நிறுத்திவிட்டு வானத்தில் நிலையாக இருந்தது" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri