ஈரானுக்கு எதிரான போர்:தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை
ஈரானுக்கு எதிராக தொடராக நடைபெறும்; போர் காரணமாக இலங்கைக்கு வாராந்தம் 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 310 கோடி ரூபாய்) வரையிலான தேயிலை ஏற்றுமதி வருமானம் இழக்கப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹோர்மூஸ் கடலிணை (Strait of Hormuz) மூடப்படுவதாலும் மத்திய கிழக்கு வான்பரப்பு மட்டுப்படுத்தப்படுவதாலும் அதிக பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கிறது என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்ட அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட போகும் 36 நாடுகள்
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 36 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான தாக்கம் தெற்காசிய பிராந்தியத்திற்கே ஏற்படும். ஈரான் போர் காரணமாக தெற்காசியாவின் பொருளாதாரத்திற்கு சுமார் 183 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானமும் சில அபாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்ற இலங்கையர்களில் 80.2 சதவீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு வருடத்திற்கு நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதம் என்றும் அதில் 2.7 சதவீதம் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தே வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam