மட்டக்களப்பில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோய் அதிகரிப்பு (Photos)

Batticaloa Sri Lanka Hospitals in Sri Lanka
By Kumar Mar 12, 2023 11:15 AM GMT
Report

கோவிட் தொற்று காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி மருத்துவர் கீர்த்திகா மதனழகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்படாத குருதிச்சோகையினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (11.03.2023) நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோய் அதிகரிப்பு (Photos) | Undiagnosed Anemia In Batticaloa

மட்டக்களப்பு - இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரோடு மட்டக்களப்பு மறைக்கோட்ட கத்தோலிக்க இளைஞர் சம்மேளனம் இணைந்து தவக்காலத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வரும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய குரு முதல்வருமான அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் அடிகளார், மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குநர் அருட்பணி டெரன்ஸ் ராகல் ஆகியோரின் தலைமையில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து 10ஆவது ஆண்டாகவும் தவக்காலத்தினை முன்னிட்டு இந்த இரத்ததான முகாமை நடாத்தியுள்ளதாக இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோய் அதிகரிப்பு (Photos) | Undiagnosed Anemia In Batticaloa

இரத்ததான முகாம்

இதன்போது  மருத்துவர் கீர்த்திகா மதனழகன் கூறியதாவது, இந்தக்காலத்தில் இரத்தத்தின் அளவு ஓரளவு போதுமானதாகயிருக்கின்றன. ஆனால் கடந்த காலத்தில் கடுமையான இரத்தப் பற்றாக்குறையினை எமது வைத்தியசாலை எதிர்கொண்டிருந்த நிலையில் வேறு மாவட்டங்களில் உள்ள இரத்த வங்கிகளில் இரத்தம் வாங்கும் நிலையிருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக எமது இரத்ததான முகாம்களை அதிகரித்து இரு மாதங்களுக்குத் தேவையான இரத்தங்களை ஓரளவு அதிகரித்துள்ளோம்.எமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இரத்ததான முகாம்கள் மூலம் இங்கேயே இரத்தம் கிடைக்குமானால் அது பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதனால் இரத்தம் விநியோகிக்கும் அளவும் அதிகரித்துச்செல்கின்றது.

ஒரு நாளைக்கு 50 தொடக்கம் 60 வரையான அலகு குருதியை விநியோகிக்கவேண்டிய தேவையுள்ளது.அந்த குருதிகளை மக்களிடமிருந்து கிடைப்பதற்கான உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைக்குமானால் அது உதவியாக அமையும்.

மட்டக்களப்பில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோய் அதிகரிப்பு (Photos) | Undiagnosed Anemia In Batticaloa

குருதி வழங்குநர்

கோவிட் தொற்றுக்குப் பின்னரான நிலப்பகுதியில் குருதிச்சோகையுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையான அதிகமாகவுள்ளது. ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்படாத குருதிச்சோகையினால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்களின் இரத்த தேவையினையும் நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான இரத்த முகாம்களை நடாத்தி குருதிகளை வழங்குவார்களானால் அது மிகவும் பிரயோசனமானதாக இந்த காலகட்டத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய இரத்ததான முகாமில் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.     

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US