வெளிநாட்டில் தலைமறைவான பாதாள உலக கும்பல் தலைவரின் சகா கைது
வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பல் தலைவரின் சகா ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் அநுராதபுரம், மீகலேவ - சியம்பலன்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் மீட்பு
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை