லசந்தவின் கொலையாளிகளை உடனே வெளிக்கொணருங்கள்! அரசுக்கு சஜித் அழுத்தம்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் (Lasantha Wickrematunge) கொலை செய்தவர்கள் யார் என்பதை அரசு உடனடியாக வெளிக்கொணர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (6) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
விசாரணை
இத்தகைய தருணத்தில், இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அரசு தலையிட்டு வெளிப்படையான விசாரணையை நடத்தி, லசந்தவின் குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி நியாத்தை நிலைநாட்டி, கொலையாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam