சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்
இலங்கை நீதித்துறையின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான திருத்தச்சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட 1979ம் ஆண்டின் 15வது சரத்துடைய குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இதுவரை காலமும் எந்தவொரு குற்றவாளியும்,சம்பவம் நடக்கும் போது 18 வயதைப் பூர்த்தி செய்யாதவராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க முடியாதவாறு சட்டவிதிகள் இருந்தன.
ஆனால் குறித்த தண்டனைக் கோவை சட்டம் திருத்தப்பட்டுள்ளதுடன் 53வது பிரிவின் பிரகாரம் நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை வழங்கும் வகையில் இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவில் வழக்குகள் தொடர்பான சட்டம் திருத்தம்
அத்துடன் இனி வரும் காலங்களில் தொழிலாளர் வழக்குகளை விசாரிக்கும் தொழில்சபையின் தலைவர் மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதியின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் சிவில் வழக்குகள் தொடர்பான சட்டமும் திருத்தப்பட்டுள்ளது.
மேற்குறித்த திருத்தச் சட்டங்களை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
எதிர்க்கட்சியினரும் திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே நிறைவேற்றப்பட்டுள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri