21வது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றின் வியாக்கியானம்! நாடாளுமன்றில் அறிவிப்பு (Live)
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றில் தனிஆள் யோசனையாக 21வது திருத்தத்தை சமர்ப்பித்திருந்தார்.
நாடாளுமன்றில் வாசிப்பு
இது தொடர்பில் உயர்நீதிமன்றின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றில் வாசிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இதனை வாசித்துள்ளார்.
இதன்படி குறித்த வரைவின் சில சரத்துக்கள் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு
எனினும் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளமையால் அவற்றை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.