விரைவில் இலங்கை வரும் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் - பிரதமர் ட்விட்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் தலைவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர்
இந்நிலையில், தனது அழைப்பை ஏற்று உலக உணவுத் திட்டத்தின் தலைவர் விரைவில் இலங்கை வருகை தர உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக உணவுத் திட்டம் எமக்கு அளித்த அனைத்து ஆதரவையும் நாங்கள் பாராட்டுவதகாவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Spoke to @WFPChief of the @WFP today and invited him to visit Sri Lanka. He accepted my invitation and is planning to visit shortly. We appreciate all the support extended to us by the @WFP.
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 10, 2022