சஜித்தை அவசரமாகச் சந்தித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி!
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கோவிட் பரவல் தீவிரமடைந்து வருவதும் அதனூடாக நாடு எதிர்கொண்டுள்ள சவால்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும் என்றும் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாம் இலங்கைக்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் கட்சி பேதம் இன்றி அரசுக்குத் தாம் ஒத்துழைப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி கோவிட் விடயத்தில் அரசியல் செய்யாது என்றும் சஜித் பிரேமதாஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam