வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றையதினம்(11.02.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநருடன், ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடினார்.
நன்றி தெரிவித்த ஆளுநர்
இதற்கு பதிலளித்த வடக்கு ஆளுநர், ஐ.நா.வின் பல்வேறு அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், குறிப்பாக மீள்குடியமர்வின் போதான உதவிகளை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைவதற்கு அந்த உதவிகள் பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருடன், ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan