கிளிநொச்சியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இழப்பீடு குறித்து ஐ.நாவின் அறிவிப்பு
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B. ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (04.09.2025) பகல்11 மணிக்கு ஊடக சந்திப்பொன்றை நடத்தி, ”கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 43ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
முழுமையான இழப்பீடு
இந்த நிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் இந்த 43 ஆயிரம் குடும்பங்களில் பன்னிரெண்டாயிரம் குடும்பங்களுக்கு மாத்திரமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய 31ஆயிரம் குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளது.
டன் இது தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய தலைவர் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கின் இரண்டு அமர்வுகள் இடம் பெற்றுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



