ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக் குழு பங்கேற்காது - கெஹலிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 ஆம் ஆண்டு அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
தமக்கு தெரிந்தளவில் இதுவரை வெளியுறவு அமைச்சு, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக குழு ஒன்றை நியமிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட காணொளி அதன் அடிப்படைகளுக்கு முரணானது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
