இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்கு-நிதி ஒதுக்கிய ஐ.நாவின் நிதிக்குழு
போர் குற்றங்களை எதிர்நோக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குகளை தொடர ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழு 2033 ஆம் ஆண்டுக்காக 3.4 மில்லியன் டொலர்களை ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது.
நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கும் இலங்கை அரசு

இந்த தொகையானது இலங்கை ரூபா மதிப்பில் 1.2 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழு, ஜெனிவா மனித உரிமை பேரவைக்கே இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியாக டொலர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடான இலங்கைக்கு தண்டனை வழங்க பெருந்தொகை டொலர்களை ஒதுக்கி இருப்பது இதுவே முதல் முறை என சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறானும் இந்த நிதி ஒதுக்கீட்டை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதுடன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழுவின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கை பிரதிநிதி, உறுப்பு நாடு ஒன்றை தண்டிக்க நிதியை ஒதுக்குவது ஐ.நா அமைப்பின் கொள்கை அதிகாரத்தை மீறிச் செல்லும் நடவடிக்கை என கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam