ஆப்கானுக்கு 20 மில்லியன் நிதியுதவி! ஐ.நா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐ.நா.வின் மத்திய அவசரக்கால உதவி நிதியிலிருந்து 20 மில்லியன் டொலா் அளிக்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், அந்நாட்டுக்கு நிகழாண்டு மட்டும் 606 மில்லியன் தேவை எனவும், உலக நாடுகள் அவற்றை வழங்க வேண்டுமெனவும் ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற உயர்நிலை நன்கொடையாளர்கள் மாநாட்டில் இந்த வேண்டுகோளை ஐ.நா. முன்வைத்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய உலகச்செய்திகளின் தொகுப்பு,