இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்! ஐநா சபையில் லெபனான் அதிர்ச்சி முறைப்பாடு
அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கும் வொஷிங்டன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கும் நோக்கில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் லெபனானின் தெற்கு எல்லைப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இரசாயன களைக்கொல்லிகளை வான்வழியாகத் தெளித்து வருவதாக ஐநா பாதுகாப்பு பேரவையில் லெபனான் அரசு அதிகாரப்பூர்வமாகப் முறைப்பாடு அளித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 1ஆம் திகதியன்று எய்தா அல்-ஷாப் ராஸ் அல்-நகூரா உள்ளிட்ட எல்லைக் கிராமங்களில் இஸ்ரேல் 'கிளைபோசேட்' என்ற இரசாயன வீரியம் மிக்க நச்சுப் பொருளைத் தெளித்ததாக அறிவியல் பூர்வ ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி முறைப்பாடு
சாதாரண விவசாய நிலங்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த இரசாயனப் பிரயோகம், சர்வதேச இரசாயன ஆயுத உடன்படிக்கைக்கு எதிரானது என்றும் இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றும் லெபனான் சாடியுள்ளது.

மேலும், ஜூன் 6 அன்று இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் பிரிகேடியர் ஜெனரல் உள்ளிட்ட 3 லெபனான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள லெபனான், இஸ்ரேலின் இந்த அடுக்கடுக்கான ஆக்கிரமிப்புகள் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்துவரும் எல்லை விலகல் முயற்சிகளை முற்றிலும் முடக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.