மரியுபோல் நகரிலிருந்து இரவோடு இரவாக வெளியேறும் உக்ரைன் மக்கள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இரவோடு இரவாக வெளியேறியுள்ள தகவல் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதலை அடுத்து மரியுபோல் நகரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியிருந்த மக்களே தற்போது இரவோடு இரவாக வாகனங்களில் வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில், 80 நாட்கள் கடந்த படையெடுப்பினால் பெரும்பாலான மரியுபோல் நகரம் தற்போது ரஷ்ய வசம் சிக்கியுள்ளது.
இந்த நிலையில், மரியுபோல் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Berdyansk நகருக்கு மக்களை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Zaporizhzhia பகுதிக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் தரப்பு திட்டமிட்டுள்ளனர்.

குறித்த திட்டத்திற்காக சுமார் 500 முதல் 1,000 கார்கள் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஒற்றை வெளியேற்றம் இதுவெனவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan