தீவிரமடையும் போர்! - உக்ரைன் மேயர் சுட்டுக்கொலை
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கிவ் அருகே உக்ரைன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, Hostomel மேயர் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Hostomel நகரம் உக்ரேனிய தலைநகர் கிவ்வுக்கு அருகில் உள்ளது, மேலும் இது ரஷ்ய மற்றும் உக்ரேனிய படைகளுக்கு இடையேயான சண்டையின் மையத்தில் ஒரு முக்கிய மூலோபாய புள்ளியான Hostomel விமானநிலையத்திற்கு சொந்தமானது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் போது யூரி பிரைலிப்கோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hostomel பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் "வீரமாக இறந்தார்" என்று கூறியுள்ளது.
இந்நிலையில், போர் காரணமாக உடனடியாக இறுதிச் சடங்கு நடத்துவது சாத்தியமற்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
