உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் என்னால் நிறுத்த முடியும்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு
இப்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தியிருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
புதிய கொள்கை குறித்த வீடியோவில் அவர் கூறுகையில்,“உக்ரைன் போரில் டாங்கிகளை அனுப்புவதன் மூலம் அணுசக்தி போரை பைடன் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் ஒருபோதும் நடந்திருக்காது.
ஆனால் இப்போது கூட நான் ஜனாதிபதியாக இருந்தால், இந்த பயங்கரமான மற்றும் வேகமாக அதிகரித்து வரும் போரை 24 மணி நேரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
ஜோ பைடனை கண்டித்த டிரம்ப்
நீங்கள் சரியான விடயங்களை சொல்வதற்கு பதிலாக தவறான விடயங்களை சொல்லக் கூடாது.

ரஷ்யாவைப் போருக்கு அழைத்துச் செல்ல நாங்கள் உதவினோம் என்று நான் நினைக்கிறேன்.”என கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் இந்த போரை கையாண்ட விதத்தை டிரம்ப் பலமுறை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பைடனை குறிப்பிட்டு உக்ரைன் போர் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri