உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் என்னால் நிறுத்த முடியும்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு
இப்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தியிருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
புதிய கொள்கை குறித்த வீடியோவில் அவர் கூறுகையில்,“உக்ரைன் போரில் டாங்கிகளை அனுப்புவதன் மூலம் அணுசக்தி போரை பைடன் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் ஒருபோதும் நடந்திருக்காது.
ஆனால் இப்போது கூட நான் ஜனாதிபதியாக இருந்தால், இந்த பயங்கரமான மற்றும் வேகமாக அதிகரித்து வரும் போரை 24 மணி நேரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
ஜோ பைடனை கண்டித்த டிரம்ப்
நீங்கள் சரியான விடயங்களை சொல்வதற்கு பதிலாக தவறான விடயங்களை சொல்லக் கூடாது.
ரஷ்யாவைப் போருக்கு அழைத்துச் செல்ல நாங்கள் உதவினோம் என்று நான் நினைக்கிறேன்.”என கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் இந்த போரை கையாண்ட விதத்தை டிரம்ப் பலமுறை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பைடனை குறிப்பிட்டு உக்ரைன் போர் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
