முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைனின் துறைமுக நகரம்: தொடரும் தாக்குதலால் சிதையும் மரியுபோல்
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் மொத்தமாக முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மரியுபோல் நகரம் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டடங்களில் இருந்து இதுவரை சிலரை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.
உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக போரிட்டு வருகின்றனர். வரைபடத்தில் இருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம்.
இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, ரஷ்ய தாக்குதலில் சிக்கி பலியானவர்களை இதுவரை மீட்க முடியாமல் உறவினர்களும் அதிகாரிகளும் தவித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக சுமார் 400,000 மக்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மரியுபோல் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
