100 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை இழந்துள்ள உக்ரைன்
ரஸ்யா உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தினால் 100 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ரஸ்ய படையினர், உக்ரைனின் 100 பில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டுமான வசதிகள், கட்டடங்கள் மற்றும் பௌதீக சொத்துக்களை தாக்கி அழித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கீயின் பிரதம பொருளாதார ஆலோசகர் ஒலெக் உஸ்டென்கோ தெரிவித்துள்ளார்.
ரஸ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைனின் 50 வீதமான வர்த்தக முயற்சிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரைவாசிக்கும் மேற்பட்ட வர்த்தக முயற்சியான்மைகள் இயலுமையை விடவும் மிகக் குறைந்த அளவில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் படையெடுப்பு உக்ரேய்னின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
