உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த ஜெர்மன் யோசனை
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை நிறுத்த ஜெர்மன் அதிபர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 115 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஜெர்மன் பிரதமர் முன்வைத்த யோசனை
இந்நிலையில், ஜெர்மன் பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடியாக பேசுவது அவசியம் எனவும் யோசனை முன்வைத்துள்ளார்.
இதேவேளை,பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துவது குறித்து புடினுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.