ரஷ்ய படை மீது உக்ரைன் பதிலடி தாக்குதல்
ரஷ்ய (Russia) ஏவுகணைப் படை மீது உக்ரைன் (Ukraine) பதிலடி தாக்குதல் நடாத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யாவின் பயங்கர ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததோடு 119க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
பதிலடி தாக்குதல்
டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உக்ரைன் படைகள் ரஷ்ய இராணுவத்தின் 448ஆவது ஏவுகணைப் படையின் தளத்தை குறிவைத்து தாக்கியுள்ளனர்.

அத்துடன் அதில், "ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் 448ஆவது ஏவுகணைப் படையின் தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
, மேலும் வெடிமருந்துகளின் இரண்டாம் நிலையில் வெடிப்பு காணப்பட்டது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri