உக்ரைன் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்
மாத்தறையில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த உக்ரைன் நாட்டுப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த நபர் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அஹங்கம பகுதியை சேர்ந்த பிரபாத் புத்திக (43) என்ற முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
அஹங்கம பொலிஸார் விசாரணை
கடல் மூழ்கி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
காணாமல்போனவரை தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |