பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
பிரித்தானியாவில் வாழும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்கள் உட்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து பாரிய தங்க கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் ஈஸ்ட்லீ மற்றும் சவுத்தாம்ப்டனில் 19 தங்க கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்க நகைகள்
தனது படுக்கையறையில் இரண்டு ஆண்களால் அலுமாரி வழியாக சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 20,000 பவுண்ட் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் திட்டமிட்டு ஒழுங்கமைப்பட்ட முறையில் தெற்காசியர்களை குறி வைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்படுவதாக ஈஸ்ட்லீ மாவட்ட தலைமை அதிகாரி மாட் பாலிங், தெரிவித்துள்ளார்.
அதிக மதிப்புள்ள தங்கம் திருட்டு அதிகரிப்பதை நாங்கள் கண்டுள்ளோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
