உக்ரைனில் போர் அபாயம்! வெளியேற தயாராகுமாறு அமெரிக்கர்களுக்கு கோரிக்கை!
உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க பொதுமக்கள், எப்போதும் புறப்பட தயாராக இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயன்று வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்ய இராணுவ முற்றுகைக்கு தயாராகி வருவதால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் உள்ளது.
இதனையடுத்தே அமெரிக்க தூதரகம், தமது குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.