விளாடிமிர் புடினின் நெருங்கிய சகாவின் மனைவி கண்ணீருடன் வெளியிட்டுள்ள தகவல்
உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவர் உக்ரைனியர்களால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய சகாவின் மனைவி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விக்டர் மெட்வெட்சக்கின் (Viktor Medvedchuk) மனைவி ஒக்சான மர்சென்கோ (Oksana Marchenko) இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
விக்டரின் இரு படங்களை உக்ரைனியர்கள் வெளியிட்டுள்ளதுடன், அவர் சாதாரணமாகக் காணப்படுவதாகவும், மற்றொன்றில் தலைமுடி கலைந்து தளர்ந்து காணப்படுவதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.
ரஷ்யப் பாதுகாப்பு மன்றத்தின் இணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், உக்ரைனிய அதிகாரிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர், விக்டரை அடித்து வாக்குமூலம் பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
