கருணா உள்ளிட்டோர் மீதான தடை! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 4 இலங்கையர்கள் மீது சமீபத்தில் தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவுகள் தொடர்பான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க, ஒரு அமைச்சர் குழுவை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் எடுத்த முடிவுகள் குறித்து அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா விதித்துள்ள தடைகளின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதற்கும் அரசாங்கம், ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
இதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான ஆய்வு நடத்தவும், தொடர்புடைய துறைகளில் நிபுணர்களை அணுகவும் அமைச்சரவை, இந்த குழுவுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மேலதிக தகவல் - இந்திரஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
