திருகோணமலையில் பெண் உட்பட 6 பேர் கைது
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்றையதினம்(01.04.2025) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகள்
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 35, 20, 21, 22, 28 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 18 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
