திருகோணமலையில் பெண் உட்பட 6 பேர் கைது
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்றையதினம்(01.04.2025) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகள்
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 35, 20, 21, 22, 28 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam