நாட்டை உலுக்கப்போகும் அறிவிப்பு: பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் குறித்து லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான வெளிப்படுத்தல்கள்” என்ற மகுடத்திலான ஆவணப்படத்தின் மூலம் இன்று வெளியிடவுள்ளதாக சனல் 4 செய்திச்சேவை அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் சனல் 4 செய்திச்சேவையினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணப்படம் பல்வேறு அதிர்வுகளைத் தோற்றுவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ள உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படத்தில் இத்தாக்குதல்களுடன் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் தொடர்புப்பட்டிருந்தமை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகவுள்ளதாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய தகவல்கள் தற்போது புகலிடம் கோரி ஜெனிவா சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவரும், பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் பேச்சாளருமான அஸாட் மௌலானா என்பவரால் வழங்கப்பட்டிருப்பதாக லண்டன் டைம்ஸின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிடப்பட்ட ஆவணப்படம் இன்றைய தினம் (05.09.2023) லண்டன் நேரப்படி இரவு 11.05 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒளிபரப்பப்படவிருப்பதாக சனல் 4 செய்திச்சேவை அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
