கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விதைகளை கொண்டு வந்தவரே இவ்வாறு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விதைகள்
சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பயணப்பொதியில் இருந்து 8 பொதிகளாக காணப்பட்ட 40 கிராம் நிறையுடைய கஞ்சா மற்றும் 58 கஞ்சா விதைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரித்தானிய பிரஜை ஏற்கனவே கஞ்சா விதைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அபராதம் செலுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் கஞ்சா விதைகளுடன் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
