பிரித்தானிய உளவுத்துறையால் நிறுத்தப்பட்ட போப் பிரான்சிஸ் மீதான படுகொலை முயற்சி!
போப் பிரான்சிஸின் ஈராக் பயணத்தின் போது அவரை படுகொலை செய்ய மாபெரும் சதி திட்டம் தீட்டப்பட்டதாக வத்திக்கான் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவமானது பிரித்தானிய உளவுத்துறையின் ஒரு தகவலின் பேரில் நிறுத்தப்பட்டது என்றும் வத்திக்கான் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.
நம்பிக்கை என்ற தலைப்பில் 2025 ஜனவரி 14 அன்று வெளியிடப்பட உள்ள போப் பிரான்சிஸின் புத்தகம் தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரி
மார்ச் 2021 இல் பாக்தாத்தில் தரையிறங்கிய பிறகு, அவர் தோன்றவிருந்த ஒரு நிகழ்வு இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் குறிவைக்கப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று போப் சுயசரிதையில் விளக்கியுள்ளார்.
மேலும், தாக்குதலாளிகள் இருவரும் பின்னர் இடைமறித்து கொல்லப்பட்டனர் என்றும், இத்தாலிய செய்தித்தாள் இது தொடர்பில் செய்திகளை வெளியிட்டிருந்தன எனவும் போப் கூறியுள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்றுநோய்களின் போது மூன்று நாட்களுக்கு நடந்த இந்த விஜயம், போப் ஒருவரால் ஈராக்கிற்கு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டதாகும்
முந்தைய ஆண்டுகளில் ஈராக்கில் முஸ்லிம் தரப்புகள் இடையே சண்டை மற்றும் மத சிறுபான்மையினரை துன்புறுத்துதல் போன்ற பிரிவு வன்முறைகள் அதிகரித்திருந்தன.
இதன்காரணமாக இஸ்லாமிய அரசு குழு மற்றும் பிற தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்ட நாட்டின் கிறிஸ்தவ சமூகம் வியத்தகு முறையில் சுருங்கிவிட்டது என போப் தனது சுயசரிதையில் விளக்கியுள்ளார்.
பிரித்தானிய உளவுத்துறை
அவரது சுயசரிதையின் சில பகுதிகளில்,
"கிட்டத்தட்ட எல்லோரும் என்னை குறித்த விஜயத்திற்கு எதிராக அறிவுறுத்தினர். ஆனால் அதைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

இந்த சதி பிரித்தானிய உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஈராக் பொலிஸாரை எச்சரித்தனர். மேலும் அவர்கள் தமது பாதுகாப்பு விவரங்களை தெரிவித்தனர்.
இளம் தற்கொலை குண்டுதாரி பெண் ஒருவர் வெடிபொருட்களுடன் போப்பாண்டவரின் வருகையின் போது தன்னை வெடிக்கச் செய்ய மொசூல் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும் அதே நோக்கத்துடன் ஒரு வானும் மிக வேகமாகப் பயன்படுத்தப்பட்டது” என்றார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan