ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய இராணுவம்
ரஷ்யாவின் இராணுவம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என அந்நாட்டின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ரொப் மகோவன் (Rob Magowan) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, போர் நிலைமை தீவிரமடைந்துள்ளது.
மேற்கத்தைய ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைனால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியிருந்தது.
தயார் நிலையில் பிரித்தானிய படைகள்
அத்துடன், உக்ரைனுக்கு உதவ முன்வரும் மேற்கத்தைய நாடுகளையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையிலேயே, புடினின் படைகள் ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அவர்களை தடுப்பதற்கு பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என ரொப் மகோவன் எச்சரித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri