எபோலா நோயிலிருந்து விடுபடும் உகாண்டா
உகாண்டாவில் எபோலா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் மூலம், உகாண்டா நாடு எபோலா வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவிப்பதற்கான 42 நாட்கள் கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், அங்கிருந்து உகாண்டாவுக்குப் பயணித்த 15 பேர் உட்பட மொத்தம் 20 பேருக்கு கடந்த மே மாதம் பாதியிலிருந்து இந்த அரிய வகை 'புந்திபூகியோ' எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதிய பாதிப்புகள்
கொங்கோவில் தற்போதும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், உகாண்டாவில் கடந்த ஜூன் 22ஆம் திகதிக்குப் பிறகு புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து உகாண்டா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், "உகாண்டாவின் கடைசி எபோலா நோயாளியான காங்கோ நாட்டைச் சேர்ந்த நபர் முற்றிலும் குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளது.

அவர் கம்பாலாவில் உள்ள முலகோ தேசிய மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி, எபோலா வைரஸின் அதிகபட்ச தனிமைப்படுத்தல் காலம் (Incubation period) 21 நாட்களாகும்.
இதனால், எவ்வித புதிய பாதிப்பும் இல்லாமல் அடுத்த 42 நாட்கள் கடந்தால் மட்டுமே ஒரு நாடு எபோலா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தற்போது உகாண்டா அந்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.