எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோல் 27 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது. டீசல் 24 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுவதனை நாம் ஒப்புக்கொள்கிறோம்.
தற்போதைய அரசாங்கம் மக்களிடம் எந்தவொரு விடயத்தையும் மூடி மறைப்பதில்லை.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகினால் அதனை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri