உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: லால்காந்த
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரும், கண்டி மாவட்ட தலைமை வேட்பாளருமான கே.டி. லால்காந்த கோரியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை
அவர்கள் சத்தம் போட்டாலும் போடாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
