அரச அதிகாரி மீது பிள்ளையான் அதிரடி நடவடிக்கை! வெளிவரும் பல உண்மைகள்(Video)
பிள்ளையானுக்கு கட்டுப்படாத அரச அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாக பரவலாக பேசப்படுகின்றது என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், "அரச அதிபர் தெரிவில் பல விமர்சனங்கள் முன்வைக்கபட்டது.
பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தும் கூட பிள்ளையான் சார்பான அரச அதிபர் ஒருவர் தான் இங்கு அழைத்துவரபட்டார் என்ற ஒரு செய்தி பரவலாக பேசபட்டது.
முன்பும் குறித்த அரசாங்க அதிபரின் நியமனத்தில் அரச செல்வாக்கு பாதிக்கப்பட்டது மறுக்க முடியாத ஓர் விடயமாகும்.
இந்நிலையில் பிள்ளையானுக்கு கட்டுப்படாத அரச அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாக பரவலாக பேசப்படுகின்றது.
இதேவேளை முழுமையாக பிள்ளையான் செய்வது அனைத்தும் பிழையென்று சொல்ல முடியாது.
அரசியல் ரீதியாக இல்லாமல் சமூக ரீதியாகவும் சில விடயங்களை பார்க்க வேண்டும்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
