தமிழரசுக் கட்சியில் சிறீதரன் - சிறிநேசன் ஆகியோரை நீக்குவதில் தீவிர திட்டம்
இலங்கையின் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இவ்வாறான மாற்றங்கள் வெறுமனே இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழ் அரசியல் கட்சிகள், முக்கியமாக தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் நகர்வுகளிலும் நிகழ வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது.
கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சிக்கு யார் தலைவர் என்ற பிரச்சினை மிக தீவிரமாக பேசப்பட்டது. அதன்பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல விவாதங்களும் நடைபெற்றன.
இவ்வாறு ஒவ்வொரு அரசியல் நகர்வுகளிலும் தமிழ் அரசியல்வாதிகள் தமது கருத்து வேறுபாடுகளால் முரண்பட்ட வண்ணமே உள்ளனர்.
இதன் உச்சகட்டமாக தற்போது தமிழரசுக் கட்சியில் இருந்து சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோரை நீக்குவதற்கு தீவிர திட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு விபரங்களையும் உள்ளடக்கி வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam