வாவியில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி!
இரத்தினபுரி மாவட்டம் , உடவளவையில் உள்ள பனாக்கடுவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய நபரின் சடலத்தைத் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.
தேடுதல் நடவடிக்கை
29 மற்றும் 30 வயதுடைய இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவரும் நீரில் மூழ்கியதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தின் உயிர்காக்கும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய நபரின் சடலத்தைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.



