இருவேறு வீதி விபத்துக்களில் இரு பெண்கள் பரிதாப மரணம்
இரு வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற இரு விபத்துக்களில் பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, நிக்கலஸ் மாகஸ் மாவத்தை, தலாதுவ சந்திக்கு அருகில் வானொன்று பாதசாரி பெண்ணொருவரை மோதியதில் குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குருநாகல் - கொழும்பு வீதி, கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியதில் அப் பெண் மரணமடைந்துள்ளார்.
கடதுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri
