29 ஆண்டுகளாக நிகழாத ஒரு விடயம்! இலங்கை டெஸ்ட் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்
29 ஆண்டுகளுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு வலது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை சார்பில் களமிறங்கியுள்ளனர்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாளான இன்று(19.06.2025) இலங்கை சார்பில் பதும் நிஸ்ஸங்க மற்றும் அறிமுக வீரர் லஹிரு உதார ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
குறித்த இருவரும் வலது கை துடுப்பாட்ட வீரர்கள் என்ற அடிப்படியில், 29 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை சார்பில் இரண்டு வலது கை துடுப்பாட்ட வீரர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸைத் தொடங்கினர்.
1995 - Boxing Day
இது போன்ற ஒரு நிகழ்வு, இறுதியாக மெல்போர்னில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலேயே நடந்தது.
1995ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நடந்த இந்த 'Boxing Day' போட்டியில் இலங்கையின் இன்னிங்ஸை ரொஷான் மஹநாம மற்றும் சண்டிகா ஹதுருசிங்க ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போதிருந்து இன்றுவரை, 260 போட்டிகளில் வலது கை மற்றும் இடது கை துடுப்பாட்ட வீரர்களே இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
